Showing posts with label Thirukovil. Show all posts
Showing posts with label Thirukovil. Show all posts

Sunday, 23 August 2020

திருவல்லிக்கேணி பவித்ர உற்சவம் நடத்துவதில் சிக்கல்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்  ஏழு நாட்கள் விமர்சையாக திருப்பவித்ரோத்சவம் நடைபெறுகிறது..  பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.  இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும்,  அத்யாபகர்களால்  திவ்யப்ரபந்த திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடும் நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ரமாலை சாற்றப்படுகிறது. 


While the whole World is reeling under Covid 19 corona virus, Triplicane seemingly is affected by different viruses.  Read this news from Dinakaran.

 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பவித்ர உற்சவம்

நடத்துவதில் சிக்கல்: பக்தர்கள் அதிர்ச்சி

 

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பவித்ர உற்சவம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பவித்ர உற்சவம் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடக்கிறது. 7 நாட்கள் நடக்கும் இந்த உற்சவத்தில் ஒவ்வொரு நாட்களும் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெறும். இந்த நிலையில் நடப்பாண்டில் பவித்ர உற்சவத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் கடந்த 2016ல் உதவி ஆணையராக ஜோதிலட்சுமி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த நிலையில் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்ததால், திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவர் உதவி ஆணையர் பொறுப்பில் இருந்து செல்லும் போது, கோயில் நகைகள், சொத்துக்கள் மற்றும் உண்டியல் பணம் தொடர்பாக ஆய்வு செய்து ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகே அந்த பொறுப்பில் இருந்து சென்று இருக்க வேண்டும். ஆனால், அவர் நகைகள் தொடர்பான ஆவணங்களை மட்டும் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரியிடம் ஒப்படைத்தார். ஆனால், நகைகள் அந்த ஆவணங்களில் உள்ளது போன்று இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்யவில்லை. இதனால், புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி நகை பெட்டக அறை திறக்கவில்லை. 

இந்நிலையில், பவித்ர உற்சவம் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 108 வெள்ளி கலசம் மற்றும் சுவாமி அலங்காரம் செய்ய நகைகள் அனைத்தையும், நகை பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து எடுத்து தர வேண்டும். ஆனால், பழைய உதவி ஆணையர் ஆய்வு செய்து ஒப்படைக்காத நிலையில், கோயிலில் நகைகள் காணாமல் போய் இருந்தால் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்கிற பயத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரி நகை பெட்டகத்தை திறக்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில் உதவி ஆணையராக இருந்த ஜோதி லட்சுமி முன்னிலையில் நகை பெட்டக அறையை திறப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அவர் வர மறுத்து விட்டதாக தெரிகிறது.  இவ்வாறு அவர் கூறினார். இதன்காரணமாக பவித்ர உற்சவம் நடைபெறுமா என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=611564

Sunday, 18 February 2018

Court condemns HR&CE for failure to protect theft in Temples


Sadly, very sadly ~ Temples are under the vicious grip of Government, governed through HR&CE  - none of the devotees dare ask – why conducting feeding on the day of a former CM inside temples with temple funds – wny not in any other religious place ? – and more importantly, why administer only Hindu temples ???

It is baffling – the grave crime that gets committed at Temples – a form of organized looting.  Recently,  the Hindu Religious and Charitable Endowment (HR&CE) Department released statistics  that 1,204 idols belonging to temples in the State were stolen between 1992 and 2017 – that gives rise to 2 fundamental Qs..

1.      What is action taken ?? -  how many recovered ??
2.      How many idols were stolen prior to that period and what is HR& CE doing ?

In Temples one could find boards showing details of defaulters – running into lakhs and remaining unpaid for a decade or so.. .. with measly rents, if it were to accumulate to lakhs – whose fault and what action – what action against those administrators who have not taken any measures to protect the Temple property that they claim to manage and realize reasonable rent !!   Recently, the HR&CE Department filed a counter affidavit in the Madras High Court listing out idols which were stolen from temples in Tamil Nadu. According to the department, between 1992 and 2017, as many as 1,204 idols — 372 stone and 832 bronze — belonging to 387 temples were reported to be missing.

Worser still -  the  Madras high court on Friday censured the Hindu Religious and Charitable Endowments department for failing to protect, preserve and maintain temple idols.

“If the idols are kept locked up without any maintenance, what is the purpose of having such a department,” Justice R Mahadevan asked, adding that the situation is the same in the 1,700 temples that he had visited in the state. The criticism by the judge pertained to the theft of several ancient idols from the state’s temples.  The court made the observation after IG Pon Manickavel, chief of idol wing, informed the court that most of the antique idols were not properly maintained by the department.  The judge then directed the additional advocate-general Aravindh Pandian, the commissioner of HR&CE and IG Pon Manickavel to sit and finalise the steps to implement various guidelines issued by the court in connection with the preservation and maintenance of idols. 

In a recent hearing, pulling up the Tamil Nadu government for failing to cooperate in investigations connected to idol thefts, the court warned that it would be compelled to order a CBI probe into the cases, if such attitude of the authorities continued. The observations were made on two separate pleas moved by R Venkataraman and advocate Elephant G Rajendran seeking transfer of investigation on all the pending cases of idol thefts to the CB-CID.

In July, 2017 the court overruled the transfer of Pon Manickavel out of the idol wing police and directed the officer to head the wing again. The court further ordered transfer of all the cases pending in various courts across the state, prosecuted by the Idol wing, to the file of the additional chief judicial magistrate, Kumbakonam, for speedy disposal on a day-to-day basis.

Recently there was news that the Hindu Religious and Charitable Endowments (HR and CE) Department  launched a survey of idols in the 4,000-and-odd temples in the Salem region. The initiative was following the unearthing of yet another idol smuggling racket and recovery of a large number of idols stolen from the temples across the State.  More than 4,000 temples are attached to the HR and CE Department in the four districts - districts of Salem, Namakkal, Krishnagiri and Dharmapuri.

Sad, they do not know what they have in possession, they cannot protect, some officials collude to – and they take and keep the God away from Temple in lockers. Only Sarweswaran can give some knowledge to these hay and save the Temples.

~ allikkeni Mainthan.
18th Feb 2018.


Thursday, 23 November 2017

How Hindu temples are managed ?!!?

How Hindu Temples are managed ? and how the common ordinary Baktha can only lament and do nothing about it ..
Here is an article of Firstpost reproduced in its entirety.  :  Head priest of Tirumala's Venkateshwara Temple is taking on the management and all knives are out  :  Nov, 21 2017 10:49:19 IST


What began as a clash between religious rites and the IAS management of the country’s richest temple, has now descended into mudslinging between the head priest and the officers in charge of administration. Dr AV Ramana Dikshitulu, head priest of the Vaishnavite temple of Lord Venkateswara at Tirumala and one of the four agama advisors of Tirumala Tirupati Devasthanam (TTD), is at loggerheads with the temple authorities and constantly in the news for his comments on the TTD administration and other controversies.

The latest row is over Dikshitulu taking his grandson into the sanctum sanctorum of the temple for which he was issued a show cause notice by the deputy executive officer of TTD, Kodandarama Rao. Dikshitulu did not bother with an official clarification, but asked Firstpostunofficially that when the relatives of TTD officials can go anywhere at any time, what is wrong with children of priests, who are also practicising archakas (priests), to visit the abode of Lord Venkateswara?

The priest is not in the good books of the TTD administrators, specifically three IAS officers — one executive officer (EO) and two joint executive officers (JEOs) — and three IPS officers. He has slammed the administration on issues like VIP darshans, shortening of rituals and alleged commercialisation of the temple. "None of them have respect for the traditions or practices as laid down by agamas (vedic scriptures defining traditions and rituals in the temple) and are making changes as per their whims and fancies to promote their personal influence," he told Firstpost.

In October, Dikshitulu told Firstpost, "Instead of being custodians they are using the temple of Lord Venkateswara to please industrialists, money bags, politicians in power and enhance their own personal power to beget better postings. But when an archaka offers blessings to these same people, he is blamed and reprimanded,” he said.

Dikshitulu was referring to an incident that took place on 10 April, 2010 when the head priest walked up to the Padmavati Guest House to offer ashir vachanam for industrialist Mukesh Ambani. The TTD had served him notice for violating temple norms in this instance. "If someone falls at my feet, I normally bless them. It is just like that for Ambani or anyone. There is nothing wrong in offering ashir vachanam for any devotee at any time or place," he said.

Dikshitulu also allegedly flew to Mumbai to bless the granddaughter of a politician and industrialist at her marriage. He allegedly performed sudarshana homam in Tirumala for the late chief minister YS Rajasekhara Reddy (YSR) and his son Jaganmohan Reddy in 2009. He is also said to have made trips to Pulivendula and Hyderabad for YSR. "Why do they want the priests alone to be holier than Lord Venkateswara? Everyone mints money in the name of Balaji, but when a priest does something routine — blessing people, performing yagnas and homams for the pious, he is questioned and issued notices," he said.

 Administrators versus rituals :  Dikshitulu though is firing all guns right back. The 'vaikhasana agama' he explains, deals with rituals that are done in the temple and to the deity. Dikshitulu says that TTD officials "overdid" the rituals, their duration and also violated norms about the prescribed persons who should be present during the rituals. "Particularly for Friday abhishekham and ekantha seva, it is the wish of the officials that prevails and not the traditions," he charged, "During the last pavitrotsavams, officials went over to the vimanam (gopuram of temple) to offer puja, which is the domain of only priests, and committed sacrilege,” he added.

In view of his critical stand, Dikshitulu is often sidelined when it comes to decisions on temple duties as he has charged that officials are appointing ineligible priests to perform pavitrotsavams. Temple officials however say that they are working in adherence to agamacounseling by three other agama advisors as per section 34(3) of the TTD Act.

Dikshitulu’s charges are not entirely baseless. The JEO of TTD has the powers of a lieutenant-governor in granting shop leases, private hotels and guest houses in Tirumala and allegations of misuse of these powers abound. Incidentally, over 30 media personnel working in Tirumala and Tirupati have business interests — shops, choultries and eating joints near the temple. For example the special correspondent of a national daily is the owner of a sprawling private choulty at Tirumala. The present JEO has continued to remain in this position for seven years, despite the normal tenure being only three years.

Dikshitulu recounts how during the last Brahmotsvam, he had suggested that priests and not attendants must give harati during vahana sevas. "Devotees are put to distress and the entire show is conducted by attendants, instead of priests where the pious are pushed and heckled. Instead why doesn't TTD conduct sarkari harati at every point?" he asked. But the officials refused.
In October last year, the head priest received another jolt when the appointment of his son Venkatapathi Dikshitulu to serve on the suryaprabha vahanam during Brahmotsvam was nullified by the TTD officials. His outburst that TTD officials should not interfere in ritual affairs and that the authority of chief priest was ignored went unheeded. Dikshitulu sought the intervention of Chief Minister Chandrababu Naidu.

VIPs and Commercialising Tirumala:  The TTD is now entertaining Andhra Pradesh MLAs and MPs, sending their voters on a pilgrimage to Tirumala — with food, entertainment, travel and darshan, all free of cost. Every day at least 75 to 100 buses and trains bring about 10,000 devotees through these politicians, for whom rooms, darshan slots and laddus are reserved by TTD officials. "What is wrong in fulfilling a promise made to our voters of a Tirupati pilgrimage and also Sabarimala visit?" asked TDP MLA from Srikakulam and state minister Atcham Naidu.

The chief priest argued that rituals are cut short to make way for VIP visits. "Although they say only two hours for VIPs, almost four to five hours of valuable time is given to them both in the morning and evening to suit the convenience of the visitors — mostly politicians, relatives and friends of EOs and JEOs and influential judges, IAS and IAS officers," he said.

Dikshitulu said he was not opposed to making more laddus, and building rooms and guest houses, but that the officialdom should not interfere in traditions and rituals as prescribed in Vaikhanasa Agamas and Divya Prabhandas scripted by Sri Ramanuja and Alwars. Secondly, sanctity and holiness of the only Vaishnavite hub in the world should not be tarnished. More importantly, agama pundits and priests who for centuries have been custodians of the temple and its practices should have the final say in number of festivals and hours of darshan.
Dikshitulu, a doctorate holder in molecular biology as well as an authority on the agamas, is one of the four families of the Vaikhanasa sect of Sri Vaishnavites who are engaged in serving the Lord Venkateswara temple and other sub-temples in Tirupati and other select towns of Rayalaseema. His family has been serving as priests at the temple for over 600 years. All these were disbanded by former chief minister NT Rama Rao, who brought out a special legislation for nationalising the Tirumala shrine and all its assets and gold with the sole goal of utilising this revenue for his anti-poverty schemes.

After two decades mired in legal battles, the government has finally taken over the TTD which has over 10,000 permanent and 12,000 contract workers. Its net worth is over Rs 42,000 crore including gold, land assets and institutions. It also has Rs 13,000 crore in fixed deposits besides 8,500 kg of gold deposited in banks under various schemes.

Dikshilutu also mentioned that the Kala Jnanam predicted by Pothuluri Veera Brahmam, a sage of the 17th Century from Kadapa, that the happenings at Tirumala would soon take it back by 100 years, is coming true. "We are giving darshan to one lakh per day by giving only two hours rest for the deity, we spend more time on laddu making, cultural shows, expanding accommodation, conducting more than 10,000 weddings per annum at Tirumala. All these were predicted by Veerabrahmam in his Kala Jnanam and that all these could vanish soon," he warned.

The TTD’s Response:   When the issue was recently raised by the media as to why the TTD administration was silent over the charges by the chief priest, executive officer Anil Kumar Singhal and his assistant JEO (Tirumala) KS Srinivasa Raju sidestepped the query. "We are here to do a job, streamlining the administration, plug loopholes. We do not interfere in temple rituals, archakas’ appointments etc. But only when there is difference of opinion among the archaka community, we are drawn to interfere," said Raju. TTD executive officer Anil Kumar Singhal stated that he did not have any differences with either Dikshitulu or other agama advisors. "As long as they stick to their functions and do not advise on how to run the temple, there are no issues," he said.

Former EO KV Ramanachari told Firstpost that the charges by Dikshitulu over the VIP darshans and other mismanagement were baseless. "We are bound by government decisions and also the decisions endorsed by the TTD governing body — the TTD Board. We cannot do anything — giving permissions, selling hair, deposit gold, approve government loans or even giving VIP darshan tickets on our own as there are set precedents on how many such permissions for VIP darshans one could give in a week or a month," he added.



tail piece :  if you had liked this and felt that the Officials are wrong ~ you will totally change your views if only you were to know something of HR&CE and the way temples are managed in Tamil Nadu. In the holy Thirumala, most money is spent on development activities and pilgrim amenities at Thirumala, way to Thirumala and elsewhere – in Tamil Nadu, the offerings of the bakthas – the believers,  generates crores of revenue for the Govt which unabashedly spends it on very purposes opposed to Hinduism and the purpose for which such donations were made !  Shame.. .. sad .. and … despicable …

Saturday, 5 August 2017

CID of State registers case against HR&CE officials for theft of idols from Temple

தீவு திடலில் நடக்கும் 'சுற்றுலா வர்த்தக பொருட்காட்சிக்கு' சென்று இருப்பீர்கள்.  அங்கே உள்ள பல ஸ்டால்ல்களில் பொது மக்களை கவர்ந்து இழுப்பது 'இந்து அறநிலையத்துறை' அரங்கம். 

கோவில்களை பராமரிக்க என அறங்காவலர்களை நீக்கி அரசாங்கத்தால் உருகாக்கப்பட்டது இந்த 'இந்து அறநிலையத்துறை'  ~ இதனுடைய முக்கிய நோக்கமே சில தனி மனிதர்கள் தங்கள் வசம் கோவில்களை கொள்ளாமல், திருகோவில்தனது  சொத்துக்களை பராமரித்து பரிமளிக்க செய்வதே !

அப்படி எனின் திருக்கோவில்களில் வரும் வருமானத்தை அரசு எப்படி தனதாக்கி கொள்ளலாம் ?  அறநிலையத்துறை அதிகாரிகள்  கார் வாங்கி பவனி வருபவதற்கா - புனித வள்ளல்கள் அறக்கொடைகளை உருவாக்கினார் ?  பொது மக்கள் இவர்களுக்காவகா உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். ??  ~  திருக்கோவில்களில் இருந்து வாகனங்களையும், பெருமாளது உடைமைகளையும் வேறு இடத்திற்கு கொண்டு வந்து காட்சி பொருளுக்குவதற்க்கு இவர்களுக்கு உரிமை அளித்தது யார் ?  - மனம் வலிக்கிறது - இதில் அற நிலையத்துறை அதிகாரிகளே சிலை திருட்டிலும் பங்கு உள்ளவர்களாம் !! 

ஐயகோ !  இது என்ன வேதனை !!!!


The management and control of the temples and the administration of their endowments is one of the primary responsibilities of the State !!! says its website. [If so, does it handle the administration of places of other worship ?] A number of measures have been undertaken prior to the year 1925 for efficient control and supervision of the administration of the Hindu Religious and Charitable Endowments says the website of HRCE

In the Act 1 of 1925, the Government constituted " Hindu Religious and Charitable Endowments Board" consisting of a President and two to four Commissioners nominated by the Government to function as a statutory body. Subsequently, Act 1 of 1925 was repealed by the Act 2 of 1927, which was followed by several modifications up to the year 1951. 

If the function is to administer a Temple, how can the funds of the temple be diverted to various other activities which have no relation to religion or that temple at all ? – Temples as great places of worship were built by philanthropists, Kings and subjects to eulogise Hinduism and Gods – now in the garb of HRCE – the revenue goes to the exchequer, revealing in the form of SUVs for officials and temple lands gets donated.  Who gives the right to authorities to remove the Vahanams and other paraphernelias of temple and keep them on exhibition elsewhere !! ~ but all these would pale when you read of complicity in idol theft .. .. no simple words of ordinary baktha – but reported in the mainline press including The Hindu and Times of India :


one’s heart would bleed !!!

According to the complainant – R. Venkatraman of K.K. Nagar in Chennai  [யார் இவரோ ?  இவர் நீடுழி வாழ்க !!] – five idols of Vinayakar, Pushpakarani, Valli, Theivanai and Chandrasekar Amman, which were with Sri Viswanathaswamy Thirukkoil at Keezhmanakkudi and the Vinayakar idol of Sri IdumbeswararThirukkoil at Srirangarajapuram were found to have gone missing in 2013.

“Though officials knew that the idols were missing, they deliberately didn’t disclose it. No complaint was lodged with the police,” the complainant alleged.

The idol wing CID of the state police has registered a case against 11 people, including seven Hindu Religious and Charitable Endowment (HR&CE) department officials, in connection with the theft of six panchaloha idols from two temples in Thanjavur district, including Pasupatheeshwarar temple at Pandanallur near ThiruvidaiMarudhur. The priceless idols date back nearly 1,500 years, said sources, adding that this was the first time HR&CE officials have been booked in an idol theft case.

The Madras high court recently re-appointed inspector general of police A G PonManickavel as investigation officer in idol theft cases handled by the idol wing CID in spite of his being transferred as IGP, railways. Pon Manickavel, who now holds additional charge as investigation officer in the idol wing CID, and his team swung into action and managed to identify idol smugglers and those who helped them stealing the idols from the Pasupatheeshwarar temple, and Idumbeshwarar temple at ShriRangarajapuram, in Thanjavur district.

Preliminary inquiries revealed that HR&CE officials failed to bring the missing of the idols, said to be worth several crores of rupees, to the notice of their higher-ups. Inquiries revealed that K Kamaraj, executive officer of Arulmigu Shree Pasupatheeshwarar Temple in Pandanallur, noticed that idols of Vinayagar, Pushpakarani, Valli, Deivayani, Chandrasekar Amman of the Pandanallur temple, and a Vinayagar idol of Idumbeshwarar temple were missing in 2013. However, he failed to report this to his senior officers and gave a clean chit to the then HR&CE commissioner.
As the officer didn't even lodge a complaint at the local police station, he has been deemed to have been deeply involved in the case. In a report submitted before the Madras high court, the idol wing CID police officers said that they registered a case against 11 CE officials, including Gajendran, joint commissioner of HR&CE in Mayiladuthurai, Gnanasekaran, assistant commissioner of HR&CE in Kumbakonam, K Kamaraj, executive officer of Pasupatheeshwarar temple, K Raja, head clerk of the Pasupatheeshwarar temple, Sekar Gurukkal and JagatheeshGurukkal, and a temple employee, apart from the trustees of the Pasupatheeshwarar temple PasupathiPillai, ManoharPillai, Ramachandran and Saravanan.

Based on the complaint of R Venkataraman, 62, a resident of K K Nagar, the idol wing CID registered a case under the IPC Sections 457 (2) (trespass), 380 (2) (theft) and 202 (Intentional omission to give information of offence by person bound to inform). The idol wing team has started investigating into the missing of the stolen idols.

Tightening the screw on the Tamil Nadu idol wing police who are in a spot after reports of cops selling ancient panchaloka idols worth several crores of rupees emerged, the Madras high court on Thursday asked the wing's inspector-general why the erring officials had not yet been arrested. Kader Batcha, a deputy superintendent of police with the wing, who has been named as kingpin in the illegal sale of seized panchaloka idols is absconding while a sub-inspector of police, Subburaj, has already been arrested.

The present proceedings related to a public interest litigation filed by advocate Elephant G Rajendran seeking transfer of the case to a neutral agency for an effective and impartial probe.

Sad, indeed !!  ~  ~  :::::::::::: தெய்வம் தான் இவர்களை தண்டிக்க வேண்டும்.

Thursday, 4 May 2017

Kedarnath Mandir reopens ~ Shri Narendra Modiji has darshan at the holy Temple

Of the many temples of Lord Shiva, this one at Himalayan range stands tall.  The temple of Shiva – ‘Kēdārnāth Mandir’ is on the Garhwal Himalayan range near the Mandakini river in Kedarnath, Uttarakhand.  Due to extreme weather conditions, the temple is open only between the end of April (Akshaya Tritriya) to Kartik Purnima (the autumn full moon, usually November). During the winters, the vigrahas (deities) from Kedarnath temple are brought to Ukhimath and worshiped there for six months. Lord Shiva is worshiped as Kedarnath, the 'Lord of Kedar Khand', the historical name of the region.

The place is not that easily accessible  by road and has to be reached by a 14 kilometres (8.7 mi) uphill trek from Gaurikund. Pony and manchan services are  available to reach the structure. The temple was built by Pandavas and revived by Adi Sankaracharya and is one of the twelve Jyotirlingas, the holiest Hindu shrines of Shiva.


Geographically it is located  21Kms from Sonprayag at an altutide of 3581 Mt., and naturally is the highest among the 12 Jyotirlingas.   The ancient temple dating back to more than  a thousand years is built of massive stone slabs over a large rectangular platform. The inner walls of the temple sanctum are adorned with figures of various deities and scenes from mythology. The origin of the revered temple can be found in the great epic - Mahabharata.

At the approach of winter in the month of November, the holy statue of Lord Shiva, is carried down from Kedarnath to Ukhimath, and is reinstated at Kedarnath, in the first week of May.  At this time, the Temple opens for darshan to pilgrims who throng in lakhs braving all difficulties.  The Temple is in most serene scenery, surrounded by lofty snow-covered mountains, a great mystic place.   There are more than 200 shrines dedicated to Lord Shiva in Chamoli district itself,yet  the most important one is Kedarnath, the present temple built by Adi Shankara in 8th century stands imposing.  It is built of extremely large, heavy and evenly cut grey slabs of stones, it evokes wonder as to how these heavy slabs had been handled in the earlier days.

Of the many worshippers, this time, it was our respected Prime Minister Shri Narendra Modiji arriving in Dehradun on Wednesday and offering prayers at the holy Kedarnath temple.  Modiji reached the Kedarnath minutes before it reopened its gates at around 8.50 am, after the six month-long winter break.  The Prime Minister took part in an important ritual inside the sanctum sanctorum.He was then presented with a miniature replica of the shrine. Earlier, Shri Modi was welcomed by Uttarakhand Governor Krishna Kant Paul and Chief Minister Trivendra Singh Rawat on his arrival here.

Shiva Shivaya Potriye !



சிவாசிவாய போற்றியே; நமச்சிவாய போற்றியே
இறப்பற்கும் ஏகனே ; பொருத்தருள் அனேகனே
பரம்பொருள் உன்நாமத்தை, கரம்குவித்து பாடினோம்

இறப்பிலி உன்கால்களை ; சிரங்குவித்து தேடினோம்

Friday, 20 January 2017

Ekkadu Thiruvural Uthsavam ~ would Perumal stop to honour idol smuggler

Of the various Uthasvams at Thiruvallikkeni Sri Parthasarathi Swami temple, one interesting Uthsavam is Ekkattuthangal Thiruvural Uthsavam.  This is not entirely religious – unconnected with Azhwar or Acharyars – but a Uthsavam happening for many decades, when Sri Parthasarathy Swami leaves Temple early morning, travels through Mylapore, TNagar, Mahalingapuram to Ekkadu – visits His place on the banks of Adyaru, has Thirumanjanam and returns after halt at Saidapet.

During this purappadu on a pallakku, Perumal stops (mandagappadi) at various places that include temples at Mylapore, Saidapet and at private places, including School and a hotel. Here is something that has appeared in Dinamalar of date questioning the wisdom of stopping to provide maryathai to a person engaged in illegal trade of idols.

Sad is the way of HRCE authorities !!!!!

ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உற்சவத்தின்போது, சிலை கடத்தல்காரன் தீனதயாளனுக்கு, கோவில் மரியாதை செய்ய, அறநிலையத்துறையைச் சேர்ந்த சிலர் முயற்சிப்பது, சேவார்த்திகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், திருவூறல் உற்சவம் நடத்தப்படுகிறது. இதன்படி, உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் திருவல்லிக்கேணியில் இருந்து புறப்பட்டு, மயிலாப்பூரில் உள்ள பேயாழ்வார், பார்த்தசாரதி சுவாமியை எதிர்கொண்டு, மங்களாசாசனம் செய்வார். இதையடுத்து, தேனாம்பேட்டை, தி.நகர், மாம்பலம் வழியாக, ஈக்காட்டுத்தாங்கலை அடைந்து, அங்குள்ள தன் சொத்துகளை பார்வையிட்டு, ஆற்றங்கரையில் திருவூறல் உற்சவம் நடத்தப்படும். பின், அங்கிருந்து பறப்பட்டு கோவில் திரும்புவார்.

உற்சவர் செல்லும் வழியில் முக்கியஸ்தர், சேவார்த்திகள் சிலருக்கு, மண்டகப்படி எனும் கோவில் மரியாதை செய்வது வழக்கம். இதில், பிரபல சிலை கடத்தல்காரன் தீனதயாளனும் ஒருவர். கடந்த ஆண்டு, சிலை கடத்தல் வழக்கில் சிக்கி, அவன் சிறையில் அடைக்கப்பட்டான். இந்தாண்டு, திருவூறல் உற்சவம், நாளை நடக்கிறது. அன்று, தீனதயாளனுக்கு மண்டகப்படி செய்யக் கூடாது என, கோவில் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில், இது குறித்த பேச்சு நடந்தது. இதில், 'தீனதயாளனுக்கு மண்டகப்படி செய்ய வேண்டும்' என, சிலர் குரல் கொடுத்தனர்.; இது, சேவார்த்திகளிடம் கடும் அதிர்ச்சியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து, சேவார்த்திகள் தரப்பில் கூறியதாவது: பாரம்பரிய கோவில்களில் உள்ள சிலைகளை கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட தீனதயாளன் வீட்டின் முன், உற்சவர் ஊர்வலம் நின்று, மரியாதை செய்ய வேண்டும் என, கோவில் நிர்வாகி ஒருவரும், சிலரும் அடம்பிடித்து வருகின்றனர். இந்த மண்டகப்படியால், அவர்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்பதால், இதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே, மண்டகப்படியால் பெரும் தொகை கிடைப்பதால், சுவாமி ஊர்வலம், பல நுாற்றாண்டுகளாக சென்ற வழித்தடம் மாற்றப்பட்டு, மகாலிங்கபுரம் சென்று சுற்றி வருகிறது. பணத்திற்காக, சுவாமி புறப்பாடு ஊர்வலத்தை, தங்கள் இழுப்பிற்கு மாற்றிக் கொள்கின்றனர். இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிலை கடத்தல்காரன் வீட்டின் முன், சுவாமி ஊர்வலம் நிறுத்தி, மரியாதை அளித்தால், அறநிலையத்துறையை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

- நமது சிறப்பு நிருபர்

Tuesday, 15 November 2016

Archaeological Dept & HRCE - uncaringly destroy old inscriptions of glorious Chola heritage

Common not knowing the significance of historical places is understandable ~ every place you visit, you can see some persons writing ‘their address, place, qualification, their love and more ‘ – they spoil the pristine glory of the place and should be condemned…. – and , what would you say, if historic evidence is destroyed by mindless act (calling it renovation) by Archaeological Dept, – who are expected to protect  and HRCE (Hindu Religious and Charitable endowments Dept) who control the finances derived by temples !!!!  Sad is the state of affairs


****************
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோக்கி எனும் தலம் காவிரி மற்றும் பழவாறு ஆகிய நதிகளின் வடபுறம் அமைந்துள்ள கிராமம்.  ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் சீரோங்கும் பொழிற்கோடைத் திருலோக்கிய சுந்தரனேஎன அழைத்து பதினொரு  பாடல்களில் திரைலோக்கி என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள ஈசனைப் போற்றிப் பரவியுள்ளார். திரைலோக்கி என்றும் திரைலோக்கிய  மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும், திரைலோக்கி என்னும் விருதராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம் என்றும் சோழப் பேரரசர்கள் காலத்தில்  அழைக்கப் பெற்ற இவ்வூர், தற்காலத்தில் திருலோக்கி என வழங்குகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை செல்லும்  சாலையில் உள்ள இவ்வூரில் கயிலாசநாதர் திருக்கோயில் என்றும்  சுந்தரேஸ்வரர் திருக்கோயில் என்றும் அழைக்கப்பெறுகின்ற இரு சிவாலயங்கள்  உள்ளன.

பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கியவர்கள்  சோழர்கள்.  நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'.  சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.    இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது.  சோழர்ச தம் மலர் ஆத்தி.   மாமன்னன் இராசராசனிற்கு  பிறகு  இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன்.   ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இராசேந்திர சோழன், தஞ்சை பெரிய கோவிலை கட்டியவனுமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான்.  சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்த வெற்றியைச் சிறப்பிக்க கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காகஇராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

நிற்க.  இது சரித்திர பதிவல்ல !  அற  நிலத்துறையும் தொல்லியல்துறையும் சேர்ந்து  ~ பணி சிறப்பு உணராமல் ஒரு அற்புத சரித்திர சான்றை தகர்த்த செய்தி.  [கீழே தினமலர் இன்றைய செய்தி 15.11.2016 அப்படியே மறுபதிவு]

முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வரலாற்று ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி கொண்ட, ஒரே தமிழ் மன்னன், ராஜேந்திர சோழன். கி.பி., 1019ல், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து கங்கைநீரை சுமந்து வந்து, கங்கைகொண்ட சோழபுரத்தின், பிரகதீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்தான். அதற்கு முன், கங்கை நீரை, திருலோக்கி கைலாசநாதர் கோவிலில் வைத்து வணங்கியதற்கான கல்வெட்டு சான்றுகள், அக்கோவிலில் உள்ளன. அந்த கல்வெட்டை, 2015ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, அறநிலைய துறையினர், வண்ணம் பூசி சிதைத்து விட்டனர். இது, வரலாற்று ஆர்வலர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அங்கு கள ஆய்வு செய்த, வரலாற்று ஆய்வாளர் கோமகன் கூறியதாவது: சோழ தேசத்தை, கி.பி., 1012 முதல், 1044 வரை ஆண்ட, முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை நீரை கொண்டு வந்து, இக்கோவில் இறைவனை வணங்கிய பின், கங்கைகொண்ட சோழபுரம் சென்றான். இது, அவனின் மெய்கீர்த்தி கல்வெட்டில், தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு முக்கிய வரலாற்று சான்று; அது சிதைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நுளம்ப நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட, ரிஷபானந்தர் மற்றும் ரதிமன்மதன் சிலைகளை, வெற்றி சின்னங்களாக இக்கோவிலுக்கு வழங்கியதாக கல்வெட்டு கூறுகிறது. அவையும், தற்போது வண்ணம் அடித்து, சிதைக்கப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: பழமையான கல்வெட்டுகள், புராதன சின்னங்களை மாற்றவோ, சேதப்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. அவை, கடந்த கால ஆவணங்கள். அவற்றை அழகுபடுத்துவதாக எண்ணி, வண்ணம் பூசுவதால், அவற்றின் மதிப்பு குறைவதோடு, எழுத்துக்களை படிக்க முடியாமலும் போய்விடும். திருலோக்கி கைலாசநாதர் கோவில், அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும், திருப்பனந்தாள் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அம்மடம், இவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை.இவ்வாறு நடைபெறாமல் இருக்கவே, தமிழக தொல்லியல் துறை, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து, பயிற்சி அளிக்கிறது. ஆனாலும், வரலாறுகள் அழிக்கப்படுவது வேதனை.இவ்வாறு அவர்கள் கூறினர்.